tamilnadu

img

திருநின்றவூர் வரை மெட்ரோ நீட்டிக்கப்படும்

சென்னை, மார்ச் 29- மெட்ரோ ரயில் திட்டம் திருநின்ற வூர் வரை நீட்டிக்கப்படும் என்று ஆவடி யில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்தார்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆவடியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் வெள்ளியன்று (மார்ச் 29)  பிரச்சாரம் செய்தார்.

அப்போது அமைச்சர் பேசுகை யில், கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடி அனை வரையும் வீட்டிலேயே இருங்கள் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். விளக்கு ஏற்றுங்கள், கை தட்டுங்கள் கொரோனா ஒழிந்து விடும் என்று கூறினார். அப்படியெல்லாம் ஒரு  நோயை ஒழிக்க முடியுமா என்று கேள்வி  எழுப்பினார். ஆனால் மாநில அரசு  மக்களிடையே கொரோனா குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசி யம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவை யான உதவிகளை செய்தது. நாட்டி லேயே அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், கொரோனா பாதித்த போதும் சரி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் கூட எட்டிப்பார்க்காத மோடி, தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கிறார். அவர் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் அவர் கூறி னார்.

ஆவடியில் செய்துள்ள பணிகள்
ஆவடியில் நீதிமன்றம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு அதற்குண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ36 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருகாரச்சேரியில் பாலம் அமைக்கப் பட்டுள்ளது. 37 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் நடைபெற்றுள்ளன. அதனால் தான் கடந்த மழையின் போது ஆவடி யில் வெள்ளம் தேங்கவில்லை என்றார்.

பூந்தமல்லியில் ரூ5 கோடி  மதிப் பீட்டில் விளையாட்டு அரங்கம் அமை க்கப்பட உள்ளது. அதிநவீன திரைப்பட  நகரம் பூவையில் அமைய உள்ளது. பருத்திப்பட்டில் ரூ2.5 கோடி மதிப் பீட்டில் அறிவியல் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதி
ஆவடியில் அமைந்துள்ள ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தனியார் மய மாக்க மாட்டோம். ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு குறு நிறுவனங்கள் ஊக்கப்ப டுத்தப்படும். ஆவடியில் விசா எடுப்ப தற்கான பாஸ்போர்ட் அலுவலகக் கிளை அமைக்க நடவடிக்கை எடுக்க ப்படும். மெட்ரோ ரயில் திட்டம் திரு நின்றவூர் வரை நீட்டிக்கப்படும்.கையில் நடைபாதை அமைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சா.மு.நாசர், கிருஷ்ணசாமி, மேயர் உதயகுமார், மாநகரச் செயலாளர் சண். பிரகாஷ், பகுதிச்செயலாளர்கள் ராஜேந்திரன், பேபி சேகர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செய லாளர் அ.ஜான், யுவராஜ், விக்டரி மோகன் (காங்கிரஸ்), மயில்வாகனன் (சிபிஐ), ஆதவன் (விசிக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.