மெட்ரோ ரயில்ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்
சென்னை,ஏப்.29- சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் அறி முகம் செய்யப்பட்டது, டோக்கன் முறையும் இருந்தது. மெட்ரோ ரயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் பயண அட்டை இனி பயணிகளுக்கு வழங்க ப்படாது.
ஆனாலும் ஏற்கெனவே கார்டு வைத்திருப்பவர்கள் அதை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்த லாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரி வித்தனர். இது குறித்து மெட்ரோ ரயில் தரப்பில் கூறியதாவது:-
ஸ்மார்ட் கார்டு விற்பனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை வழங்கி வருகிறது. பொதுப் பயன்பாடு உள்ள அந்த கார்டை ஊக்குவிப்பதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
மாதவரத்தில் வழிபறி
சென்னை, ஏப். 29- மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் பவன் (32). இவர் சென்னை மாதவரம் பகுதி யில் தங்கியிருந்து சிமெண்ட் கலவை லாரி ஓட்டி வரு கிறார். இவர் மாதவரம் பொன்னியம்மன் மேடு சாஸ்திரி நகர் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் பவனை தாக்கி, அவர் வைத்திருந்த கைப்பேசி, பணப்பை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, 4 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.