tamilnadu

img

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் தென்  மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 7 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து திருப்பூர், திருப்பத்தூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு  வாய்ப்பு உள்ளது. மேலும் அக்டோபர் 20 முதல் மீண்டும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

;