அடிப்படை வசதியற்ற மேல்நல்லாத்தூர் முதல்நிலை ஊராட்சி!
திருவள்ளூர், ஏப்.23- மேல்நல்லாத்தூர் முதல்நிலை ஊராட்சியில், அடிப்படை தேவை களை நிறைவேற்ற கோரி சிபிஎம் சார்பில் புதனன்று (ஏப்.23)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் அருகில் உள்ள கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்நல்லாத்தூர் முதல்நிலை ஊராட்சியாக செயல்படுகிறது. இந்த ஊராட்சியில் 2 ஆயிரம் குடும்பங்க ளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தனியார் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் ஏராளமான குடும்பங்கள் நாள்தோறும் இப்பகுதியில் குடியேறி வருகின்றனர். நகர்ப்புறமாக மாறிவரும் மேல்நல்லாத்தூர் முதல்நிலை ஊராட்சியில் போதுமான அடிப்படை தேவைகளே இன்னும் தீர்க்கப்படவில்லை என்கின்றனர். மேல்நல்லாத்தூர் முதல்நிலை ஊராட்சியில் 700க்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலைக்கான அட்டைகள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு 6 மாத சம்பள பாக்கியை வட்டியுடன் வழங்க வேண்டும், தற்போது வேலை வழங்க வேண்டும் என்று கேட்டால் நாள் ஒன்றுக்கு வெறும் 20 நபர்க ளுக்கு மட்டும் வேலை வழங்கப் படும். மற்றவர்களுக்கு சுழற்சி முறை யில் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி வழங்கினால், அடுத்து வேலை செய்ய ஓராண்டு வரையாகும். இதனை போக்க ஒன்றிய மோடி அரசு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வேலையை தொடர ஒன்றிய அரசு திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.முதல்நிலை ஊராட்சியில் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. மேல்நல்லாத்தூர் முதல்நிலை ஊராட்சி என்று கூறப்படுகிற நிலை யில் காந்தி நகரில் அனைத்து சாலை களும் குண்டும் குழியுமாக காட்சிய ளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என கடந்த 2ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்திலும், கடம்ப த்தூர் பிடிஒ விடமும் பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைநீர் கால்வாய்கள் மேல்பகுதிமூடப்படாமல் அபாயக ரமான நிலையில் உள்ளது. விநாயக கோவில் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, கருணாநிதி தெரு, திருவள்ளுவர் தெரு, ராஜீவ்காந்தி தெரு ஆகிய தெருக்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும். ராஜீவ்காந்தி தெரு, ஜீவா தெரு, அம்பேத்கர் தெரு, அமுதா நகர் பகுதியில் கான்கிரீட் சாலை கள் அமைக்கப்பட்டு இரண்டு பக்கங்களி லும் மழைநீர் கால்வாய்கள் திறந்த வெளியாக உள்ளது. இதனால் கால்வாயில், முதியோர், குழந்தை கள் தவறிவிழும் அபாயம் உள்ளது. இதன் மூலம் கொசுக்கள் வேக மான உற்பத்தியாகிவருகிறது. தொற்று நோய்கள் பரவாமல் இருக்க இந்த திறந்தவெளி கால்வாய்களை உடனேமூட வேண்டும். காந்தி நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும், பூங்கா விற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் உடனடியாக பூங்கா அமைக்க வேண்டும். இறந்தவர்களுக்கு ஈமக்காரியம் செய்யும் கூடம் அமைக்க வேண்டும், மயானத்திற்கு செல்லும் பாதை யில் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் திருவள்ளூர் வட்டக் குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஜி.கண்ணன், ஆர் தமிழ்அரசு, வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன், வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.செந்தில்குமார், டி.ஆனந்தன், எம்.சின்னராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஜி.ஆறுமுகம், சண்முகம் ஆகியோர் பேசினர். நிறைவாக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட பிடிஒ செல்வி பணிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.