tamilnadu

img

ஜன.5 இல் சட்டப்பேரவைக்கூட்டம்: மீண்டும் செயின் ஜார்ஜ் கோட்டையில் கூடுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநர் ரவி உரையாற்றுகிறார்.

இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"2022-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆளுநர் ரவி உரையாற்றுகிறார். இதற்காக ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூடுகிறது" என்றார்.

இந்த முறையும் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் 'காகிதமில்லா' நிகழ்வாக நடைபெறும் என்றும் பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

வழக்கம் போல் இந்த கூட்டத்தொடர் இருக்கும் கொரோனா நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும் எனவும் பேரவைத்தலைவர் அப்பாவும் கூறினார்.

கோவிட்-19 பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் செயின் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக கோட்டை வளாகம் கடந்த ஒரு மாத காலமாக புதுப்பிக்கப்பட்டதால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

;