சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரு கிறது. அதில், சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பிறகு பதில் அளித்து பேசிய அமைச்சர் கா. ராமச்சந்திரன் புதிய அறிவிப்பு களை வெளியிட்டார்.
அப்போது, “அரியலூர் மாவட்டத்தில் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவாலயப் பகுதி, சிவகங்கை மாவட்டம் பிரான்மலை பகுதி, திருநெல் வேலி மாவட்டத்தில் விஜயாபதி மற்றும் தெற்கு கள்ளிக் குளம் தேவாலயப்பகுதி, தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை ஆகிய வழிபாட்டு சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதி கள் ரூ.8.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
வான் நோக்கு சுற்றுலா!
தமிழ்நாட்டில் கிராமியச் சுற்றுலா மற்றும் வான் நோக்கு சுற்றுலா ஆகியவற்றை மேம் படுத்துவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை ரூ. 50 லட்சம் செல வில் தயாரிக்கப்படும். கடற்க ரைப் பகுதிகளில் ரூ. 6.50 கோடி யில் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவதானப்பட்டி ஏரி, புங்கனூர் ஏரி, தாமரைக்குளம் ஏரியில் படகு குழாம் மற்றும் இதர சுற்றுலாப் பணிகள் ரூ. 5.70 கோடியில் மேற்கொள்ளப் படும். கிராமியச் சுற்றுலா மையங் கள் ரூ. 3 கோடியில் மேற்கொள் ளப்படும்.
நீர் சாகச விளையாட்டுகள்!
கோயம்புத்தூரில் பல்வேறு மருத்துவ தொழில் பங்குதாரர் களின் ஒத்துழைப்புடன் மருத் துவ சுற்றுலா மாநாடு ரூ. 1 கோடி யில் நடத்தப்படும். நீர் சாகச விளையாட்டுகளை ஊக்கு விக்கும் பணிகளுக்கு ரூ. 1 கோடி செலவிடப்படும். புதுப் பட்டினம் கடற்கரை, பழவேற் காடு ஏரிப்பகுதிகளில் சுற்றுலாப் பெருந்திட்டம் ரூ. 1 கோடியில் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரி வித்தார்.