tamilnadu

img

ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.51 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்

சென்னை, செப். 9- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப் பட்டன. வடசென்னை மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமி ஏற்பாட்டில் சென்னை ரப்பர் தொழிற்சாலை (எம்ஆர்எப்) நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் ராயபுரம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை மைய மேசை, அல்ட்ரா சோனோகிராம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், கலாநிதி வீராசாமி ஆகி யோர் மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் திங்களன்று (செப். 9) வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது”என்றார். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இது வரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குரங்கம்மை அறிகுறியுடன் இந்தியா வந்தவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எந்த நாட்டில் இருந்து வந்தார், தற்போது  எங்கே இருக்கிறார் என்ற தகவல் களை ஒன்றிய அரசு ரகசியமாக வைத் துள்ளது. விமான நிலையங்களில் விழிப் புணர்வு பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், தமிழ்நாடு -  கேரள எல்லையில் உள்ள 13 சோதனை  சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியவர்கள், குழந்தை களுக்கு முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் புதிதாக கொப்பளங்கள் உள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பாலாஜி, எம்ஆர்எப் நிறுவன பொது மேலாளர் ஜேக்கப் சாக்கோ, நிறுவனத்தின் நிர்வாகிகள் ஜோசப் வி செரியன், என்.நந்தகுமார், ஜி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.