tamilnadu

img

மருத்துவ சங்க கூட்டமைப்பினர் தர்ணா

கடலூர், ஜூலை 12- கடலூரில் மருத்துவ சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு தர்ணா  போராட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு முடித்த அரசு மருத்துவர்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்த வேண்டும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசு மருத்துவர்களுக்கான பட்ட மேற்படிப்பை 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்,  மருத்துவக் கல்லூரி களில் மருத்துவம் பயிற்றுவிக்கும் பணியை  மட்டும் எடுத்துக் கொள்ளாமல் நோயாளி களின் எண்ணிக்கையைப் பொறுத்து மருத்து வர்களை நியமிக்க வேண்டும், மறு சீர மைப்பு என்ற பெயரில் ஏற்கனவே பணியில் இருக்கும் மருத்துவர்களை பணியிட மாற்றம்  செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டம் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நடத்தப்பட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மருத்துவர் கேச வன், பட்டமேற்படிப்பு மற்றும் அரசு மருத்து வர்கள் சங்க மாநிலச் செயலாளர் சாமி நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15,  16 ஆகிய தேதிகளில் சென்னையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது.