tamilnadu

மே 22 பிஎஸ்எல்வி சி - 46 விண்ணில் பாய்கிறது

சென்னை, மே 17-பிஎஸ்எல்வி சி-46 விண்கலம் விண்ணில் பாய்வதை நேரில் பார்ப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.வரும் 22ஆம் தேதியன்று ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 விண்கலம் விண்ணில் பாயவுள்ளது. அன்றைய தினம் காலை 5.27 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ள இந்த விண்கலத்துடன், ரேடார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட் 2பி இணைக்கப்படவுள்ளது. இதற்கான தொழில்நுட்பப் பணி கள் நிறைவடைந்துவரும் நிலையில், வரும் 21ஆம் தேதியன்று இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.கடந்த முறை இஸ்ரோ சார்பாக பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் விண்ணில்ஏவப்பட்டதை சுமார் 1,200 பேர் நேரில் கண்டுகளித்தனர். அப்போது, அடுத்த விண்கலம் ஏவப்படும்போது சுமார் 5,000 பேர் காணும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்திருந்தார் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன். அதற்கேற்ற வகையில் ஸ்ரீஹரிகோட்டாவில் வசதிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில், சனி(மே 17) காலையில் விண்கலம் ஏவுவதைப் பார்ப்பதற்கான முன்பதிவு தொடங்கியது. பிஎஸ்எல்வி சி-46 விண்கலம் ஏவுவதைப் பார்க்க விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை சுமார்500 பேர் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது இஸ்ரோ.விண்கலம் ஏவுவதைக் காண் பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், இரண்டு பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டு மல்லாமல், இஸ்ரோவின் கடந்த காலப்பணிகள், சாதனைகள் குறித்துவிளக்கும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றும் அதன் அருகே அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக ரிசாட் 2பி செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.