tamilnadu

முக்கியக் குற்றவாளிகள் விடுதலையை ஏற்க முடியாது!

 சென்னை, மே 2- மாணவிகளைத் தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி தண்டிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் முக்கியக் குற்ற வாளிகள் விடுதலை செய்யப்பட்ட தற்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மாதர் சங்கத்  தின் மாநிலத் தலைவர் எஸ்.  வாலாண்டினா, மாநில பொதுச்செய லாளர் அ. ராதிகா ஆகியோர் அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டை அருகே தனியார் கல்  லூரியில், மாணவிகளைத் தவறாக  வழி நடத்திய சம்பவம் தமிழகத்தை  பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யது. பிரச்சனை வெளிவந்தவுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழகம் முழுவதும் வலு வான போராட்டங்களை முன்னெ டுத்தது. 

விருதுநகர் மாவட்டத்தில் சம்  பந்தப்பட்ட கல்லூரியின் முன்பு ஜன நாயக மாதர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாண  வர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்கத்தின் வழக்கறிஞர் உ.  நிர்மலா ராணி, தலைவர்கள் சுகந்தி,  லட்சுமி உள்ளிட்டோர் வலுவான தலையீட்டைத் செய்து வந்தனர். இதன் பின்னணியில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

2018 மே மாதம் தொடரப்பட்ட வழக்கில் அக்கல்லூரியின் பேராசிரி யர் நிர்மலா தேவி குற்றவாளி என  ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் பத்தாண்டு சிறை தண்டனையும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராத மும் விதித்துள்ளது.

அதேநேரம், இவ்வழக்கின் 2-ஆம் மற்றும் 3ஆம் குற்றவாளி களான- பல்கலைக்கழக உதவிப்  பேராசிரியர் முருகன், ஆய்வு மாண வர் கருப்பசாமி ஆகிய இருவரை யும் போதிய சாட்சியங்கள் இல்லை  எனக் கூறி நீதிமன்றம் விடுவித்துள்  ளது. மேலும் இவ்வழக்கில் யாருக் காக பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தயார்படுத்தினார் என்ற உண்மை வெளிவராமலே உள்ளது. 

எனவே, இவ்வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார் பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2-ஆம் மற்றும் 3ஆம் குற்றவாளிகளான- பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் யாருக் காக பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தயார்படுத்தினார் என்ற உண்மை வெளிவராமலே உள்ளது.