tamilnadu

முஸ்லிம்கள் உட்பட நீண்டகால சிறைவாசிகள் 12 பேர் விடுவிப்பு!

சென்னை, பிப். 7 - முஸ்லிம்கள் உட்பட நீண்டகால ஆயுள் சிறைவாசிகள் 12 பேரை விடு தலை செய்த தமிழ்நாடு அரசின் நட வடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் இதுதொடர் பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டுச் சிறைகளில் 25  ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப் பட்டிருந்த முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

கண்டுகொள்ளப்படாமல் இருந்த குரல்கள்

அறிஞர் அண்ணா நூற்றாண்டு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுகளையொட்டி சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்ட பின்பும், இவர்களை விடுதலை செய்ய கடந்த ஆட்சிக் காலத்தில் மறுத்து வந்த னர். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சிபிஐ(எம்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள், சிறைவாசிகளின் குடும்பங்கள், சிறு பான்மை மற்றும் மனித உரிமைப் பாது காப்பு அமைப்புகள் எழுப்பிய குரல்கள் கண்டு கொள்ளப்படவில்லை.

தமிழக அரசின் முடிவைக்  காலம்தாழ்த்திய ஆளுநர்
இந்நிலையில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒரு  குழு அமைத்து, அக்குழுவின் ஆலோச னைப்படி இச்சிறைவாசிகளை விடு தலை செய்வதற்கான கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கண்டனப் போராட்டங்களை  முன்னெடுத்தன. 

முதல்வர் மு.க. ஸ்டாலினின் பாராட்டுக்குரிய நடவடிக்கை
பல மாதங்கள் இழுத்தடித்த ஆளு நர், தற்போது நீண்ட காலமாக சிறை யில் உள்ள 12 சிறைவாசிகளை விடு தலை செய்வதற்கான ஒப்புதல் அளித்த அடிப்படையில் தற்போது இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள னர். இவர்களது விடுதலையை வர வேற்பதுடன், விடுதலை செய்வ தற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழக முதலமைச்சருக்கு பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேபோல, நீண்டகாலமாக அடைப்பட்டுள்ள சிறைவாசிகளையும் விரைவில் விடுதலை செய்ய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.