மதுரை, ஏப். 6 - மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தியாகி இமானுவேல் பேரவை (TIP) அறிவித்துள்ளது.
தியாகி இமானுவேல் பேரவையின் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் எம்.ஊர்க்காவலன் தலை மையில் மார்ச் 24 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடை பெற்றது.
இதில், “2024 நாடாளு மன்றத் தேர்தலில் மதவாத பாசிச சக்திகளை (பாஜக) வீழ்த்திடவும், இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தை பாதுகாத்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், தமிழ கத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள ”இந்தியா” கூட்டணி கட்சிகளை ஆத ரிக்க வேண்டும் என தியாகி இமானுவேல் பேரவையின் அரசியல் குழுவில் எடுத் துள்ள நிலைப்பாட்டை செயல்படுத்தும் விதமாக பொதுக்குழுவிலும் விவா தித்து, அதன்படி ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தருவது” என ஒருமனதாக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
முன்னதாக ‘இந்தியா’ கூட்டணியை ஆதரிக்க காரணம் என்ன? என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. அதில், ஜனநாயக விரோதப் போக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் மதவாத பாசிச சக்திகளை வீழ்த்தி டவும், தமிழகத்தில் காவி பயங்கரவாத கும்பலை வேரோடும், வேரடி மண் ணோடும் அகற்றுவது பெரி யார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்களின் கொள்கை வழியில் பய ணிக்கும் தியாகி இமானு வேல் பேரவை போன்ற சமூக இயக்கங்களின் கடமையா கும். அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஏப்ரல் 19 அன்று நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியி டும் அனைத்து கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்திட தியாகி இமானுவேல் பேர வை தனது முழு ஆற்றலை யும் செயல்படுத்தி தேர்தல் களத்தில் பரப்புரை செய் யும்” என்று முடிவெடுக்கப் பட்டது.
இந்த ஆதரவு நிலை பாடு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடித மாக அனுப்பி வைக்கப் பட்டது.
பொதுக்குழுவின் நிறை வில், ‘இந்தியா’ கூட்டணி யின் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி, டிஐபி நிர்வா கிகளை நேரில் சந்தித்து, அமைப்பின் முடிவுக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோல மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடே சன் கீழவளவு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டி ருந்த போது, அவரை தியாகி இமானுவேல் பேரவையின் தலைவர் எம்.ஊர்க்காவலன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, தங்களது அமைப்பின் ஆதரவைத் தெரிவித்தார். சிபிஎம் மூத்த தலைவர் எஸ். பாலசுப்பிர மணியன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே. அர்ச்சுணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லத் தலைவர் செல்லக் கண்ணு, சிபிஎம் விருதுநகர் நகரச் செயலாளர் எல். முருகன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.