tamilnadu

img

திப்பு சுல்தானுக்கு சத்தியமங்கலத்தில் மணிமண்டபம் முதல்வரிடம் நாகைமாலி, சின்னதுரை எம்.எல்.ஏ கோரிக்கை

சென்னை, டிச.11- சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழு தலைவர் நாகைமாலி, கந்தர்வக் கோட்டை தொகுதி எம்எல்ஏ  எம்.சின்னதுரை இருவரும் சந்தித்தனர்.

அப்போது, மைசூர் ஸ்ரீரங்கப்பட்டி னத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி  நடத்திய திப்பு சுல்தான் பிரிட்டிஷா ருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் அவரு டைய ஆட்சியில் முக்கியமான இட மாகும். இதற்கு ஏராளமான வரலாற்றுச்  சான்றுகள் உள்ளன. 

சுதந்திரப் போராட்ட வீரர், மத நல்லிணக்கத்திற்கு மணிமகுடமாக திகழ்ந்த திப்புசுல்தானுக்கு சத்தியமங்கலத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.

மதுரை முல்லை நகருக்கு பட்டா

மதுரை மாவட்டம், பீ.பீ.குளம் அருகில் உள்ள முல்லைநகர் பகுதியில்  சுமார் 642 குடும்பங்கள் 60 ஆண்டு களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றன. 160-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர். இந்த குடியிருப்புகளுக்கு அருகில் பீ.பீ. குளம் கண்மாய் உள்ளது.

சுமார் 40 ஆண்டுகளுக் கும் மேலாக இந்த கண்மா யில் இருந்து நீர் வெளி யேறவில்லை. 2024 நவம்பர்  மாதம் பெய்த கனமழையால், இந்த  கண்மாயை சரிவர தூர்வாராத கார ணத்தால் மழைநீர் குடியிருப்பு பகுதி களுக்குள் புகுந்துள்ளது.  

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதி  மக்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி வரும் என்பதால் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், மதுரை பீ.பீ.குளம் சர்வே  எண்.23-ல் வசிக்கும் 642 குடும்பங் களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, இம்மக்களுக்கு வகை  மாற்றம் செய்து பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாவட்டம், பரவை 2 பிட்,  சத்தியமூர்த்தி நகரில் இந்து காட்டு நாயக்கன் சமுதாய மக்கள் கடந்த  70 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற னர். இவர்களுக்கு பழங்குடி இந்து  காட்டுநாயக்கன் சாதிச் சான்றிதழ் (எஸ்.டி) வருவாய் கோட்டாட்சியர், வடக்கு வட்டாட்சியர் விசாரணை மேற் கொண்டு 1500-க்கும் மேற்பட்டோருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கினர். இதன் மூலம், இம்மக்கள் பள்ளியில் சேர்ந்து  பயனடைந்து வருகின்றனர்.  

ஆனால் தற்போதுள்ள வருவாய் கோட்டாட்சியர் இம்மக்களுக்கு இந்து காட்டுநாயக்கன் சாதிச் சான்றி தழ் (எஸ்.டி) வழங்க மறுக்கிறார்.  இதனால் கல்வி மற்றும் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுஉள்ளதால் சாதிச்  சான்றிதழ் கோரி தொடர் போராட்டங் களை இம்மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மக்களுக்கு இந்து காட்டுநாயக்கன் சாதிச் சான்றிதழ் (எஸ்.டி) வழங்கி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல மைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள் வதாக தெரிவித்துள்ளார்.