விழுப்புரம்,ஆக.20- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், பனையபுரம் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணையினை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அன்னியூர் அ.சிவா, விழுப்புரம் இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சங்கீதா அரசி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜீவிதா ரவி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மீனா வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.