ஆம்பூர், ஏப்.5- இந்தியா கூட்டணியின் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆம்பூர் நகர பகுதிக்கு உட் பட்ட கஸ்பா, மந்த கரை, மளிகை தோப்பு, காதர் பேட்டை, ரெட்டி தோப்பு, புதுமனை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஜவா ஹிருல்லா,“ அன்றாட உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டக் கூடிய மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் அதற்கான நாள்தான் தேர்தல் நாள் ஏப்ரல் 19” என்றார்.
மோடி எதிர்ப்பலை
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக மீனவர்கள் நலனில் ஒரு துரும்பு கூட மோடி அரசு அக்கறை காட்டவில்லை. தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் மோடிக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசிக்கொண்டே இருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணி தமிழ்நாடு புதுவை உட்பட 40 தொகு திகளையும் முழுமையாக கைப் பற்றும்” என்றார்.
ஒன்றிய பாஜகவின் துரோகம்!
மேலும், 2019-ஆம் ஆண்டு தேர் தல் பரப்புரைக்கு இராமநாதபுரம் வந்த இன்றைய பிரதமர் மோடி, “பாரம்பரிய மீனவர்கள் பழங்குடி யினராக கருதப்படுவார்கள். இந் திய மீனவர்கள் இலங்கை கடற்ப டையால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோம். அதிக மீன் இருக் கும் இடத்தை கண்டுபிடிக்க கருவி கள் வழங்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அதில் ஒன்றைக் கூட கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றாதவர் தான் பிரதமர் மோடி” என்பதையும், “ஒன்றிய பாஜக ஆட்சியில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் 400 படகுகளை இலங்கை கடற் படை பறிமுதல் செய்துள்ளது. 3,250 மீனவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்” என்பதையும் சுட்டிக் காட்டினார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி வில்வநாதன், தமு முக மாநில செயலாளர் ஏஜாஸ் அஹ்மத் உட்பட பலர் உடனிருந்தனர்.