தொழிற்சங்கத் தலைவர்களை அவமதித்த காவல்நிலைய ஆய்வாளருக்கு கண்டனம்
சென்னை, நவ. 28 - தொழிற்சங்கத் தலை வர்களை அவமதித்த ஆர்-1 மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளருக்கு ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.நகர் உஸ்மான் சாலை யில் உள்ள நல்லி துணிக்கடை அருகே ஆட்டோ நிறுத்தம் உள்ளது. அங்கு கடந்த நவ.24 ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் சவாரிக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஆர்-1 மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி ஓட்டுர்களை தரக்குறைவாக பேசி, தாக்கியுள்ளார். இது குறித்து விசா ரிப்பதற்காக காவல்நிலை யம் சென்ற ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் என்.அமரேசன் உள்ளிட்டோரையும் ஆய்வா ளர் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். செல்போனை பறித்துக் கொண்டுள்ளார். இத்தகைய அராஜக மான செயலில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் பாலமுரளி மீது காவல்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.3) அன்று வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.
10 சவரன் நகை கொள்ளை
செய்யூர்,நவ.28- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த மடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. விவசாயி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக 10 சவரன் தங்க நகைகளை வாங்கி வீட்டின் மேலே உள்ள பரணில் பாது காப்பாக வைத்துள்ளார். கடந்த வாரம் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு மகளுக்கு நகைகளை அணிவித்து அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு நகைகளை வழக்கம்போல் பரணில் வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் களைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சந்தேகமடைந்த துரை பரணில் நகை இருக்கிறதா என பார்த்தபோது நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து செய்யூர் காவல் நிலையத்தில் துரை புகார் கொடுத்தார். இதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.