ரூ.1000கோடி திரட்ட கடன் பத்திர வெளியீடு
சென்னை,ஆக 7 இந்தியாவின் மிகப் பெரிய வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆக. 6 அன்று பொது மக்களுக்கு கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. இதன் மூலம் ரூ. 1,000 கோடி திரட்டப்படுகிறது. வணிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக கடன் பத்திரம் வெளியிடப்படுகிறது. இந்தக் கடன் பத்திரங்களுக்கு 10.5 விழுக்காடு வருமானம் கிடைக்கும் மற்றும் அதிக அளவு பாதுகாப்பை கொண்டவை. முதலீட்டாளர்கள் அதிகமாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் மேலும் ரூ. 900 கோடிக்கு பத்திரங்களை வெளியிடும். ஐ.ஐ.எஃப்.எல் பாண்டுகள், 69 மாத காலத்திற்கு முதிர்வுக்கு ஆண்டுக்கு 10.50 விழுக்காடு அதிக வருமானம் அளிக்கிறது. இது பாதுகாப்பான பத்திரங்களுக்கு 15 மாத குறுகிய காலத்திற்கு ஆண்டுக்கு 10விழுக்காடு வருமானம் கொடுக்கிறது என்று அதன் இயக்குநர் எஸ். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்திற்கு இடம் ஆய்வு
செங்கல்பட்டு, ஆக.7- காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிட மாக கொண்டு தமிழகத்தின் 35 ஆவது மாவட்டமாக செங்க ல்பட்டை முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார். மாவட்ட எல்லையை வரை யரை செய்யவும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பா ளர் அலுவலகம் உள்ளிட்ட 54 துறைகளை நிர்வாக ரீதியில் பிரிப்பது, அவர்களுக்கான அலுவலகங்களை அமைப்பது, பொதுமக்களிடம் கருத்து கேட்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தனி அதிகாரி ஏ.ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அமைப்பதற்காக உத்தே சித்துள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலம், வெண்பாக்கத்தில் அரசு ஐ.டி.ஐக்கு சொந்தமான நிலம் சுமார் 80 ஏக்கர் போன்ற இடங்களை தனி அதிகாரி ஏ.ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். மேலும் இந்த நிலங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண்டார். எனினும், ஆட்சி யர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. இதே போல் புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்கு வதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.