சென்னை, ஜூன் 16- மதுரை காமராசர் பல்கலை க்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி நடைபெற்றுள்ளது என்று மதிமுக பொதுச்செய லாளர் வைகோ கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்பு களுக்கான சேர்க்கை அறிவிப்பு, பிப்ரவரி முதல் வாரம் வெளி யிடப்பட்டது. 13.5.2019 அன்று நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு வரும்படி, விண்ணப்பித்த மாணவர்களுக்கு பல்கலைக் கழக நிர்வாகம் மே 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் சாதாரண அஞ்சலில் கடிதம் அனுப்பியது. நுழைவுத் தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியது. இடையில் உள்ள இரண்டு நாள்க ளில் ஒரு நாள் விடுமுறை. எனவே, பெரும்பாலான கடிதங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. எனவே, திங்கட் கிழமை கலந்தாய்வில் குறைந்த அளவு மாணவர்களே கலந்து கொண்டனர்.மற்ற இடங்கள் அனைத்தும் காலி இடங்கள் என, பிற்பகல் 2 மணிக்கு அறிவித்தனர். அதன்பிறகு, பிற்பகல் 3 மணிக்கே, உடனடி மாணவர் சேர்க்கை என அறிவித்து, அவசர அவசரமாக மாணவர் சேர்க்கை நடத்தி முடித்துள்ளனர். அதேபோல, அறிவியல் முதுநிலை பட்டப்பிரிவுகளுக்கு, 25.5.2019 அன்று கலந்தாய்வு நடத்தினர். அதற்கான அறிவிப்பும் மூடு மந்திரம்தான். நுழைவுத் தேர்வு முடிவுகளை அறிவிக்காமலேயே, இதற்கும் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தி இருக்கின்றனர். இத்தகைய மோசடியான மாணவர் சேர்க்கையினால், தகுதி உள்ள பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை; தகுதி இல்லாத பலர் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள், நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண்கள், இள நிலை பட்டப்படிப்பில் 50 மதிப்பெண்கள் பெற்றவர்க ளுக்கு மட்டுமே இடம் என்ற அளவில் சேர்க்கை நடத்துகை யில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை அனைத்தும் மூடு மந்திரமாகவே நடத்தி முடிக்க ப்பட்டு இருக்கின்றது. மாணவர் சேர்க்கையில் நிகழ்ந்துள்ள தவறுகளையும், முறைகேடுகளையும் மறைப்ப தற்காக, மதுரை காமராசர் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள், நுழைவுச் சீட்டு அறிவிப்புகள் அனைத்தும் திடீரென நீக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான மாண வர்கள் சேர்க்கையில் நடை பெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து, தக்க விசாரணை நடத்த வேண்டும்; முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும்; தகுதி உடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; முறைகேடு செய்த வர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.