பணியாளர்களை கலந்தாய்வு செய்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
திருவள்ளூர், ஜூன் 4- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க, திரு வள்ளூர் மாவட்ட திட்ட இயக்குநர் பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிட மாற்றம் செய்வதை கைவிட்டு கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என உள்ளாட்சி துறை ஊழி யர் சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.ஜி.சந்தானம் வலி யுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 90 சதவீதமான பெண் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ரூ.12 ஆயிரமும், திட்ட இயக்க மேலாளர்களுக்கு ரூ.15 ஆயி ரமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பணி யாளர்களுக்கும் 5 ஊராட்சிகள் பொறுப்பு கள் வழங்கப்பட்டு பணியாற்றி வரு கின்றனர். குறிப்பாக பெண் பணியாளர்கள் வாரத்திற்கு இரண்டு நாள் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள் பார்வை செய்து போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாள் வட்டார அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு மேல் வீடியோ கான்பரன்ஸ் மூலம்திட்ட இயக்குநர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இரவு 7 மணிக்கு கூட்டம் முடிகிறது. அதற்கு பிறகு வீட்டுக்கு செல்ல வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அனைத்து மக்கள் நல திட்டங்களையும் இந்த திட்டத்தில் பணியாற்றும், பணியாளர்கள் மூலமாக செயல்படுத்தி வருகிறார்கள். இப்படி செய்யும் பணி யாளர்களை கலந்தாய்வு செய்யாமலேயே வெகு தொலைவில் இருக்கும் ஒன்றியங்களுக்கு திடீரென 62 பணியாளர்களையும் பணி யிட மாற்றம் செய்திருப்பது, அதுவும் பெண் பணி யாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. கடந்த காலத்தில் இப்படி பணியிட மாற்றம் செய்த 4 பெண் பணியாளர்கள் தாங்கள் வகித்த பணியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. மகளிருக்கு முன்னுரிமை தரும் இந்த ஆட்சியில் மகளிருகாகவே செயல்படும் பெண் பணியாளர்களை கருணையின்றி குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களை வெகு தூரத்தில் பணியிட மாற்றம் செய்திருப்பது பொருத்தமற்றது. எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு பணியாளர்களை கலந்தாய்வு கூட்டம் நடத்தி பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டதமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கதிட்ட இயக்குநர்பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு பணியாளர்களை கலந்தாய்வு கூட்டம் நடத்தி பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.