சென்னை, நவ. 14- தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பு வோருக்கான விருப்பமனு விநியோகம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக் கான அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணை யம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பு வோருக்கான விருப்பமனு 14 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அக்கட்சி யின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தி ருந்தார். அதன்படி 14 ஆம் தேதி சென்னை உட்பட தமிழகம் முழுவதும், திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித்தேர்தலில் திமுக சார்பில் மாநகர மேயர், நகராட்சித் தலைவர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு போட்டி யிட விரும்புவோருக்கு, இன்று துவங்கி வரும் 20 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.