tamilnadu

img

வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை, டிச.21- வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக ளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதி களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்  ஆகும்.

அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்வானவர்களின் பதவிக்காலம் ஜனவரி 5 ஆம் தேதியுடன்  முடிவுக்கு வருகிறது. இதனால் இதற்கான  தேர்தல் நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் 45 நாட்களுக்கு முன்னர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இருப்பினும் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப் படாமல் உள்ளது.

இந்நிலையில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக ளுக்குத் தேர்தல் நடத்தாமல் சிறப்பு  அதிகாரிகளை நியமிக்க திட்டமிடப் பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்காகத் தனி மற்றும் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அவசர சட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற  ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்கா லம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வரை உள்ளது குறிப்பி டத்தக்கது. தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஜனவரி  6ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த கூட்டத்தொ டரில், ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்குத் தனி மற்றும் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசரச் சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும்  என எதிர்பார்க்கப்பட்டது, இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், முனியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ கத்தில் உள்ளாட்சி அமைப்புக ளுக்கான பதவி காலம் முடிவடைய உள்ளன. இந்நிலையில், வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பட்டி யலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறி விப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்.” என கோரியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசார ணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடை பெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ஆகியோர், “வார்டு  மறுவரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளி ருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளி யிடப்பட மாட்டாது” என உத்தர வாதம் அளித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.