மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ‘பிஎம் ஸ்வாநிதி’ திட்டத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் தமுக்கம் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையாளர் எல். மதுபாலன் முன்னிலை வகித்தார், மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் வாசுகி முருகேசன், சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் முருகன், டி. குமரவேல், வை. ஜென்னியம்மாள், மாநகராட்சி வெண்டிங் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற எட்டு வங்கிகளின் சார்பில் 21 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் அளவிற்கான கடனுதவி வழங்கி, நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியது:
“சாலையோர வியாபாரத்தின் முதலீடு மிகக்குறைவு. ஆனால் பெரும்பாலானோர் அந்த முத லீட்டுக்காக கந்து வட்டிக்காரர்களி டம் போய் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் வருவாயில் பெரும் பகுதி வட்டி கட்டுவதிலே போய்விடு கிறது. எனவே, அவர்களுக்கு வங்கி மூலம் கடன் கொடுக்க பெருமுயற்சி செய்தோம்.
குறிப்பாக, ‘பிஎம் ஸ்வாநிதி’ என்கின்ற சாலையோர வியாபாரி களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை மிக விரிவாக நடத்த ஏற்பாடு செய் தோம். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரி களில் பெரும்பாலானவர்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைக்க வேண்டுமென்று தொடர்ந்து முயற் சித்தோம். நான்கு முறை இதற்கான முன்னேற்பாட்டு கூட்டத்தை நடத்தி னோம். அதில் மாவட்ட ஆட்சியர், குறிப்பாக, ‘பிஎம் ஸ்வாநிதி’ என்கின்ற சாலையோர வியாபாரி களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை மிக விரிவாக நடத்த ஏற்பாடு செய் தோம். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரி களில் பெரும்பாலானவர்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைக்க வேண்டுமென்று தொடர்ந்து முயற் சித்தோம். நான்கு முறை இதற்கான முன்னேற்பாட்டு கூட்டத்தை நடத்தி னோம். அதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் வங்கி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு விரிவாக திட்ட மிட்டோம். அது வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது. ஆணையர் மற்றும் வங்கி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு விரிவாக திட்ட மிட்டோம். அது வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.
மதுரை சாலையோர வியாபாரி கள் பற்றி, டோக் பெருமாட்டி கல் லூரி மாணவிகள் மூலம் அண்மை யில் ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. அந்த ஆய்வில் பல புள்ளிவிப ரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்களில் 70 சதவிகிதம் பேர் பெண்கள். இதில் சுமார் 40 சதவிகி தம் பேர் தனித்து வாழக்கூடிய பெண்கள். இந்நிலையில், இவர் களுக்கு ‘பிஎம் ஸ்வாநிதி’ என்ற திட்டம் பொருளாதார ரீதியாக வளம் கொடுக்கக்கூடிய முக்கிய திட்டமாக இருப்பது தெரியவந்துள் ளது. இதில் முதல் கட்டமாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் கட்டமாக ரூ. 20 ஆயிரம் மூன்றாம் கட்டமாக ரூ.50 ஆயிரம் என்று கடன் வழங்கப்படு கின்றது.
அந்த வகையில், இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் மதுரை மாநகராட்சி பகுதியில் பத்தாயிரம் சாலையோர வியாபாரி களுக்கு 10 கோடி ரூபாய் வரை கடன் என்பது வழங்கப்பட்டுள்ளது என் பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது மாநக ராட்சி பகுதியில் உள்ள சாலை யோர வியாபாரிகளில் 50 சதவிகி தம் பேருக்கு தற்போது கடன் வழங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் 50 சதவிகி தம் பேருக்கு கடன் கொடுத்த மாநக ராட்சி என்பது மதுரை மாநகராட்சி யாகத்தான் இருக்கும். இது தேசிய அளவிலும் ஒரு சாதனை அளவா கத்தான் இருக்கும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் கொடுத்ததில் மதுரை மாவட்டம் தான் முதலிடம் வகித்தது, அதேபோல் மாணவர் கள் உயர்கல்விக்கு கல்வி கடன் வழங்கியதில் மதுரையை முதல் இடத்திற்கு மாற்றினோம். இவற் றின் தொடர்ச்சியாக சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கு வதிலும் புதிய அளவை எட்டி யுள்ளோம். இதற்கு உதவிய, உழைத்த அனைவருக்கும் நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன்.”