tamilnadu

அனைவருக்கும் மடிக்கணினி

 சென்னை, ஜூலை 2 - 2017, 2018ஆம் ஆண்டுகளில் பள்ளியில் பயின்ற  மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். பேரவையில் செவ்வாயன்று (ஜூலை 2) பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் மீது பேசிய  காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், மாணவர்களை ஆசிரியர்களே அடிக்கக்கூடாது என்கிற நிலை யில், மடிக்கணினி கேட்டு போராடுகிற மாண வர்கள் மீது காவல்துறை தடியடி நடத்துகிறது. அதனை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர், மடிக்கணினி கள் கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அதனால்  2017, 2018 ஆகிய ஆண்டுகளில் கொள்முதல் செய்ய  முடியவில்லை. தற்போதுள்ள பாடத்திட்டத்தின்படி 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மடிக்கணினி இருந்தால்தான் அவர்களது எதிர்காலம் சிறப்பாக  இருக்கும். எனவே, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மடிக்கணினி வழங்கப்படுகிறது. 2017, 2018ஆம் ஆண்டு படித்து கிடைக்காத மாண வர்களுக்கு நான்காம் கட்டமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய பிரின்ஸ், ஆசிரி யர் தேர்வு வாரிய (டிஆர்பி) தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்றார்.  அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டை யன், டிஆர்பி தேர்வில் 82 ஆயிரம் பேர் காத்தி ருக்கின்றனர். ஆனால், ஏற்கெனவே 16 ஆயிரத்து  432 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே தற்போதைக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்க இயலாது என்றார்.