சென்னை,ஜூன் 2-மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், மும்மொழிக்கல்விக் கொள்கையானது தாய் மொழியுடன் இணைப்பு மொழியாக ஆங்கிலம், அவற்றுடன் வேறொரு மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழித் தேர்வு மாநிலங்களின் அடிப்படையில் இருக்கவேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழிஇருக்க வேண்டும் என்றும், இந்திபேசாத மாநிலங்களில் - எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ்,ஆங்கிலம், இந்தி என்று இருக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் கட்டாயமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத - குறிப்பாக தமிழ்நாட்டில்கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது இந்துத்துவாவை கல்வி மூலம் திணிக்கும் திட்டமிட்ட ஏற்பாடாகும்.மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனதுஇரண்டாம் பயணத்தின் தொடக்கத்திலேயே இந்தி பேசாத மாநிலங்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும் தான் - இரு மொழிக் கொள்கைதான் என்று அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது சட்டமே இயற்றப்பட்டு விட்டது.இந்த நிலையில் மத்திய பிஜேபி ஆட்சி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.ப.சிதம்பரம்புதிய கல்வி கொள்கையின்படி மூன்று மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் பா.ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது. புதியகல்வி கொள்கையில் பள்ளிகளில் முதல்வகுப்பில் இருந்தே மும்மொழித் திட்டம்என்று அறிவித்து இருக்கிறார்கள். பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்றால்என்ன அர்த்தம்? இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக்காட்டி இருந்தேன். சமஸ்கிருத மொழியை பரப்புவோம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு ‘பாரதிய மொழி கலாச்சாரம்’.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.