திருவண்ணாமலை, ஜூன் 30- திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கீதா பாரதி கலைக்கூடத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புற கலை ஞர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இசை ஆசிரியர் முனை வர் தி. பாரதி தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் எஸ்.முத்து, பொரு ளாளர் எஸ். ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சி யில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, நாட்டுப்புற கலைஞர்கள் பிள்ளை களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நாடகக் கலைஞர் முருகையன், திரைப்பட கலைஞர் நன்னாரி வினோத், ஆசிரியர் கார்த்திகேயன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், கலைஞர் அ.கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினர்.