கோயம்பேட்டில் காய்கறி விலை அதிகரிப்பு
சென்னை, ஆக.23- கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தென் மாவட்டங்களில் தொடர் மழை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகள் விலை அதிகரித்து காணப்ப டுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ கேரட் ரூ.100க்கும், எலுமிச்சை ரூ.150க்கும், வெங்காயம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒன்றரை மடங்கு உயர்ந்தது.
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘வரத்து குறைவால் கேரட், வெங்காயம், எலுமிச்சை உள்ளிட்ட வற்றின் விலை உயர்ந்துள்ளது. ஊட்டியில் மழை காரண மாக குறைவான கேரட் வந்ததால் கேரட் விலை உயர்ந்துள்ளது. அதே போல் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைவால் அதன் விலை உயர்ந்துள்ளது,’’ என்றார்.
மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர் ஆணையத்தலைவர் ஆய்வு
சென்னை,ஆக.23-
சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டல அலுவலகத்தில், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் மா. வெங்கடேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர் நலன்தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் இலவச கழிப்பறைகளைப் பராமரித்திடும் ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் ஒப்பந்த தாரிடம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களிடமும் கலந்துரையாடி, அவர்களது கருத்துக்கள் கேட்கப் பட்டது. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியின்போது கையுறை, காலணி, முகக்கவசம் உள்ளிட்ட பாது காப்பு ஏற்பாடுகளுடன் பணியாற்றுதல், இதற்கான நடவடிக்கைகளை உரிய அலுவலர்கள் மேற்கொள்ள ஆணை யத்தின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கிப் பேசினார்.