tamilnadu

img

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.359 கோடியில் புதிய கட்டிடம்

சென்னை, ஜூலை 31 - கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 359 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை விரை வில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜெய்கா) நிதியுதவியுடன் 358.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை புதனன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார அமைப்பு இயக்கம் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி முகமை நிறுவனமும் இணைந்து பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள் ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையை வடசென்னை பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தீப்புண் காயங்களுக்கு மிகப்பெரிய அளவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவக் கல்லூரியும் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இதனையொட்டி 359 கோடி மதிப் பீட்டில் 6 மாடி கொண்ட புதிய கட்டிடம்  கட்டப்பட்டுள்ளது. 2 லட்சத்து 68 ஆயி ரத்து 815 சதுர அடி பரப்பில் அமைந் துள்ள இந்த கட்டிடத்தில் 441 படுக்கை கள் அமைக்கப்பட உள்ளது.

இந்த கட்டிடத்தில் ஒரு கூட்டு அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டு 12 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்படுகிறது. இது தவிர்த்து ஆசியாவிலேயே மிகப்பெரிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு ஐபிரிட் அறுவை சிகிச்சை அரங்கமும் அமைக்கப்படுகிறது. இதுவும் கூட்டு அறுவை அரங்கமாக செயல்படும். எம்.ஆர்.ஐ, டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில் நுட்ப கருவிகளும் இங்கு நிறுவப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை விரை வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த மருத்துவமனையின் கட்ட மைப்பை மேலும் வலுப்படுத்த உலக  வங்கி நிதி ஆதாரத்துடன் ரூ.125  கோடி மதிப்பீட்டில் டவர் பிளாக்  புதிய கட்டிடம் கட்டும் பணிகளும் அருகில் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ)  மரு.பாஸ்கரன், மருத்துவக் கல்வி  தேர்வுக் குழுத் தலைவர் மரு.அருணா  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.