tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள வயநாடு நிவாரண நிதி

முதல் பட்டியல்

ஜி.ராமகிருஷ்ணன்,
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்    1000
மாநில செயற்குழு உறுப்பினர்கள்
கே.பாலகிருஷ்ணன், 
மாநிலச் செயலாளர்    1000
பி.சம்பத்    1000
உ.வாசுகி    5000
பெ.சண்முகம்    1000
ப.செல்வசிங்    1000
எஸ்.நூர்முகமது    500
என்.குணசேகரன்    1000
கே.கனகராஜ்    500
மதுக்கூர் ராமலிங்கம்    1000
சு.வெங்கடேசன்    10,000
கே.பாலபாரதி    1000
ஜி.சுகுமாறன்    1000
கே.சாமுவேல்ராஜ்    1000
எஸ்.கண்ணன்    1000
என்.பாண்டி    1000
டி.ரவீந்திரன்    1000
எஸ்.முத்துக்கண்ணன்    1000
மாவட்டக்குழுக்கள்
திருவள்ளூர்    16799
காஞ்சிபுரம்    25000
திருச்சி புறநகர்    25000
சேலம்    72700
ஈரோடு    27000
திருப்பூர்    100000
கோயம்புத்தூர்    100000
விருதுநகர்    71880
சிவகங்கை    5000
மாநில மைய அலுவலக கிளை    6200
    4,79,579
முதல்வர் வெளிநாடு பயணம்: ஆக. 13 அமைச்சரவைக் கூட்டம்

சென்னை, ஆக.7- தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகிற 13 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

சென்னை, ஆக.7- கடந்த 2006-11 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த தங்கம்  தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப் பட்ட வழக்குகளில் இருந்து இரு வரும் விடுவிக்கப்பட்ட நிலை யில், கீழமை நீதிமன்றங்களின் இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை(ஆக.7) உத்தரவிட்டுள்ளது. 

மேலும், குற்றச்சாட்டை பதிவு  செய்து தினமும் வழக்கு விசார ணையை நடத்த வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் விசாரணைக்கு ஆஜராகும்படி யும் உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை, ஆக. 7- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட அருள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப் பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியிலிருந்து நீக்கம்

இதனிடையே, கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதன் தலைவர் லெனின் பிரசாத் நடவடிக்கை எடுத்துள்ளார்.