tamilnadu

img

வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவியரசர் கண்ணதாசன் விழா

வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவியரசர் கண்ணதாசன் விழா

வேலூர், ஜூன் 28 - வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவி யரசர் கண்ணதாசன் விழா வேலூர் ஊரிசு கல்லூரியில் காப் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். கம்பன் கழக செயலாளர் சோலைநாதன்  வரவேற்க, ரா.ப.ஞானவேலு முன்னிலை வகித்தார். விழாவை ஊரீசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் தியோடர் ராஜ்குமார் துவக்கி வைக்க, வேலூர் கம்பன் கழக தலைவரும் விஐடி துணைத் தலைவருமான  கோ.வி.செல்வம் நோக்க உரையாற்றினார். விழாவில் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கலந்து கொண்டு தனது தந்தையின் நினைவுகளை பகிர்ந்த பின், விழாவில் சிறப்பு மலர் வெளி யிடப்பட்டது. பேராசிரியர் கவியருவி மு.அப்துல் காதர் சிறப்புரையாற்ற, கம்பன் கழகப் பொருளாளர் ஆர்.திருநாவுக்கரசு நன்றி கூறினார்.