கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். காவல் துறையில் சுருக்கெழுத்தராக பணியாற்றிய சண்முகநாதன் பின்னர் 1969ம் ஆண்டு முதல் கலைஞரின் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கலைஞர் முதல்வராக இல்லாத போது அவரது உதவியாளராக பணியை தொடர தனது அரசு பதவியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.