tamilnadu

img

5 வயது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அழைப்பு

5 வயது குழந்தைகளை  அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தை களையும் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தினர். கள்ளக்குறிச்சி (ஆண்) நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை(மார்ச் 5) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர், தமிழக அரசு 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது.  கள்ளக்குறிச்சி (ஆண்)  நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 10 மாண வர்கள் 1 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர் என்றார். தொடர்ந்து பேசிய ஆட்சியர், அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தகுதி யான ஆசிரியர்களை கொண்டு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சிறப்பாக பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாண வர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, சீருடை,காலை சிற்றுண்டி, மதிய உணவு,கல்வி உதவித் தொகை கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங் கள் செயல்படுத்தப்படுகிறது.மேலும் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கள்,உட்கட்டமைப்பு வசதிகள் தமிழக அரசின் அறிவுரையின்படி உடனுக்குடன் மேம்படுத்தப்பட்டு வருவதால்  5 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தை களையும்  1 ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சரவணன்,பள்ளி தலைமையா சிரியர்,ஆசிரியர்கள் உள்ளிட்ட சம்பந்தப் பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.