tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கலைஞர் நாணயம் இன்று வெளியீடு

சென்னை, ஆக.17- முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரது உருவம் பொறித்த 100  ரூபாய் நாணயம் ஞாயிற் றுக்கிழமை (ஆக.18) வெளி யிடப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில், மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் நடைபெறும் விழாவில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  கலந்து கொண்டு நாண யத்தை வெளியிடுகிறார். முன்னதாக, மெரினாவில் உள்ள கலைஞர் நினை விடத்திற்குச் சென்று அஞ்  சலி செலுத்தி விட்டு கண்  காட்சியையும் பார்வையிடு கிறார்.

கனமழை வாய்ப்பு:
22 ஆட்சியர்க்கு முன்னெச்சரிக்கை

சென்னை, ஆக.17- தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், தென்  காசி, நெல்லை, கன்னியா குமரி உள்பட 22 மாவட்டங் களுக்கு சென்னை வானிலை மையம் கனமழை எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து தேவை யான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனே மேற் கொள்ள வேண்டும். மக்க ளுக்கு தேவையான அனை த்து நிவாரண உதவிகளை யும் தயார் நிலையில் வைத் துக் கொள்ள வேண்டும். 24  மணிநேரமும் வெள்ளத் தடுப்புக்கு உஷாராக இருக்க  வேண்டும் என்று தெரிவித்தி ருக்கிறது.

குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்த கூடாது
உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை, ஆக.17- நிதி மோசடியில் ஈடுபட்ட தற்காக குண்டர் தடுப்புச்  சட்டத்தில் அடைக்கப்பட் டதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு  சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்  துறை தரப்பில், மனுதார ரின் உதவியுடன் ரூ. 3.30 கோடி வரை மோசடி நடை பெற்றது என்பதால் குண்டர்  தடுப்பு சட்டம் போடப்பட் டுள்ளதாக விளக்கம் அளிக்  கப்பட்டது.

இந்த வழக்கை விசா ரித்த நீதிபதிகள், குண்டர்  சட்டத்தை சர்வ சாதாரண மாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. தனி  நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்  படுத்தக் கூடாது என திட்ட வட்டமாக தெரிவித்தனர். மேலும் யார் குண்டர்கள் என்  பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என அர சுக்கு அறிவுறுத்தினர்.

பொதுத்துறை வங்கியை கைவிட்ட ரயில்வே

சென்னை, அக்.17- எச்டிஎப்சி வங்கி அளிக்  கும் சலுகைகளின் அடிப்ப டையில் தென்னக ரயில்வே யின் சென்னை கோட்டமும்- எச்டிஎப்சி வங்கியும் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளன. இதன்படி 21 ஆயிரத்து 782 ஊழியர்  களின் சம்பளக் கணக்கும், 38  ஆயிரத்து 798 ஓய்வூதியதார் களின் ஓய்வூதியக் கணக்கு களும் எச்டிஎப்சி வங்கிக்கு செல்கிறது.