tamilnadu

கலைச் செம்மல் விருதுகள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,பிப்.2- தமிழ்நாடு அரசு சார்பில் வெளி யிடப்பட்ட அறிவிப்பு வருமாறு:- தமிழ்நாடு அரசு கலை பண் பாட்டுத் துறையின் ஓவிய நுண் கலைக்குழு வாயிலாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை  வல்லுநர்களுக்கு, நவீன பாணி  கலை வல்லுநர்களுக்கு நுண்கலைத்  துறையில் செய்துள்ள அரும்பெரும்  சாதனைகளையும், சேவைகளை யும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசுத் தொகையும் வழங்கி வருகிறது.

இந்த விருதுக்கான கலை ஞர்களைத் தேர்வு செய்யும் வகை யில் தேர்வாளர் கூட்டம் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் ஓவியர் கள் கோபிநாத், ஜெயக்குமார், சண்முகபிரியா, சிற்பிகள் தே.ராதா கிருஷ்ணன் ஸ்தபதி, கோவிந்த ராஜன், நவீன சிற்பக் கலைஞர் ராக வன் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு 2021-2022 முதல் 2023-2024 வரையிலான மூன்று  ஆண்டுகளுக்கான 18 கலைஞர் களைத் தேர்வு செய்தனர்.

மரபுவழி ஓவியம் பிரிவில் ஓவியர் ராமு (எ) எஸ்.எஸ்.ராமதாஸ்,  மணியம் செல்வன், ஏ.ராஜ மோகன்,  வாசுகி லஷ்மி நாராயணன், சோ.வேல்முருகன் (கோவில்பட்டி, தூத்துக்குடி) மரபுவழி சிற்பம் பிரிவில் இரா.செல்வநாதன் ஸ்தபதி,  முனைவர் கி.ராஜேந்திரன், உலோக  சிற்பக்கலைஞர் இரா.ரவீந்திரன், மரசிற்ப கலைஞர் க.பால்ராஜ் (சிவகங்கை) நவீன ஓவியம் பிரிவில் அ.விஸ்வம், கோ.சுப்பிரமணியம், எஸ்.வி.பிரபுராம், எஸ்.அருணகிரி, கே.புகழேந்தி, அதிவீரராம பாண்டி யன், நவீன சிற்பம் பிரிவில் ந.கருணா மூர்த்தி, டி.விஜயவேல், ஹேமலதா ஆகிய கலைஞர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் வரும் திங்கள்கிழமை (பிப்.5) மாலை 4.30 மணியளவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை யங்கள் துறை அரசு கூடுதல் தலை மைச் செயலாளர் முன்னிலையில் நடைபெறும் இசை விழாவில் விரு தாளர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட உள்ளது.