“நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்தை உறுதிப்படுத்த, மதச் சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் ஆட்சி அமையும். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, தேசிய அளவில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளத்தை அமைக்கும்” என்று ஐயுஎம்எல் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.