சென்னை, மார்ச் 28- கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்ட ணியை வரும் மக் களவைத் தேர்தலில் வீழ்த்திடவும், இந் தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வ தற்குமான தேர்தல் பிரச்சார பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஏப்ரல் 2 அன்று மாலை 6 மணிக்கு தென் காசியில் துவங்குகிறார். இரவு 8 மணிக்கு நெல்லையில் பிரச்சாரக் கூட்டத்தில் உரை யாற்றுகிறார்.
சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம்
ஏப்ரல் 3 அன்று தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மாலை 6 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள் கிறார். அதன் தொடர்ச்சியாக, இரவு 8 மணிக்கு விருதுநகர் காங்கிரஸ் வேட்பா ளர் மாணிக்கம் தாகூருக்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்கிறார்.
ஏப்ரல் 4 அன்று மாலை 6 மணிக்கு தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு ஆண்டிப்பட்டியிலும், இரவு 8 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு மதுரையிலும் வாக்குகள் சேகரித்து உரை யாற்றுகிறார்.
ஏப்ரல் 5 அன்று மாலை 6 மணிக்கு திண் டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சி தானந்தத்திற்கு வாக்குகள் சேகரித்து பழ னியிலும், இரவு 8 மணிக்கு பொள்ளாச்சி திமுக வேட்பாளரை ஆதரித்து உடு மலைப்பேட்டையிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஏப்ரல் 7 அன்று திருப்பூர் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சுப்பராய னுக்கு வாக்கு சேகரித்து கோபிச்செட்டி பாளையத்திலும், ஏப். 13 அன்று ஜெயங் கொண்டத்தில் திருமாவளவனை ஆத ரித்தும், ஏப்.15 அன்று நாகைப்பட்டினத் தில் சிபிஐ வேட்பாளர் செல்வராஜை ஆத ரித்தும் உரையாற்றுகிறார். தொடர்ந்து 15 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் வீரமணி ஏப்ரல் 17 அன்று தஞ்சாவூரில் தனது பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்கிறார்.