சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலைக்கு கே.பாலகிருஷ்ணன் மரியாதை
டாக்டர் அம்பேத்கர் 135வதுபிறந்த நாளை யொட்டி சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கருப்பையன், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், நகர் மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, விசிக மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தில்லை ஆர். மக்கீன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் விசிகாவினர் திரளாக கலந்து கொண்டனர்.