சென்னை, ஏப். 4- பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி சமூக நீதியை சிதைக்கும் பாஜகவிற்கு பாடம் புகட்டு வீர் என்று ஆவடி கூட்டத்தில் கே.பால கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பா ளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி தொகுதிக் குழு சார்பில் ஆவடி ரவுண்டானா அருகே பொதுக்கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா. பூபாலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் மகா கூட்டணி அமைக்க ப்பட்டுள்ளது. தேர்தல் தொடங்கு வதற்கு முன்பே பாஜகவின் தோல்வி தற்போது உறுதியாகி விட்டது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. ஆனால் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட வில்லை. அங்கே குடியரசு ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மாநில அரசின், மாநில மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து விட்டார்கள். அங்குள்ள கட்சிகள் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என வலி யுறுத்துகிறார்கள். ஆனால் மோடி அரசு தேர்தலை நடத்த மறுக்கிறது. ஏனென் றால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடி யாது என்ற அச்சம்தான் என்றார்.
பாஜக வேட்பாளர்கள் ஓட்டம்
மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று. 100 இடங்களுக்கு மேல் அவர்கள் வெற்றிபெற முடியாது. ஏனென்றால் தொழிலாளர்கள், விவசாயிகள், வணி கர்கள் என அனைத்து தரப்பினரும் பாஜகவை எதிர்க்கத் தொடங்கி விட்ட னர். மோடியின் சொந்த ஊரான, அக்கட்சியின் உயிர் மூச்சான குஜராத் உட்பட பல மாநிலங்களில் பாஜக தரப்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர் கள் தோற்று விடுவோம் என்ற அச்சத் தில் தேர்தலில் நிற்காமல் தலை தெறித்து ஓடுகிறார்கள். ஒன்றிய அமைச்சராக இருந்த வி.கே.சிங் கூட போட்டியிடவில்லை என அறிவித்து விட்டார். அதேபோல்தான் நிர்மலா சீதா ராமனும். தென் மாநிலங்களில் போட்டி யிட்டால் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில்தான் அவர் போட்டியிட வில்லை என்றும் பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்தார்.
எடப்பாடி மன்னிப்பு கேட்பாரா?
எடப்பாடி பழனிச்சாமி உதட்டளவில் பாஜகவை விமர்சிக்கிறார். மக்களவை தேர்தல் முடிந்த பிறகும் பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என எடப்பாடி பழனி ச்சாமி அறிவிக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தவறு என பகிரங்கமாக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்கத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கடந்த 3 மாதத் திற்கு முன்பு கூட மோடிதான் 3ஆவது முறையாக பிரதமர் ஆவர் என அறி வித்தார். சிஏஏ, புதிய வேளாண் சட்டம் உள்ளிட்ட அனைத்து மசோதாக் களுக்கும் ஒப்புதல் அளித்து விட்டு இப்போது பாஜகவை எதிர்க்கிறோம் என்றால் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? மக்கள் நிச்சயம் நீங்கள் செய்த துரோகத்திற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இட ஒதுக்கீடு பறிபோகும்
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் தனியார்மயம் ஆகி வருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்புத் துறை, ரயில்வே, காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட எந்த பொதுத்துறை நிறு வனங்களும் இருக்காது. பொதுத் துறை நிறுவனங்கள் இல்லை யென்றால் இட ஒதுக்கீடும் இருக்காது. அரசியல் சட்டம் சிதைக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள். சமூக நீதி என்னும் ஆணிவேரை அடி யோடு அறுக்க நினைக்கிறார்கள் பாஜக வினர்.
கிரிமினல்களின் கூடாராம்
அண்ணாமலை பணியில் இருந்த போது பிடித்த கிரிமினல்களை விட, அவர் பாஜகவின் தலைவர் ஆன பிறகு பாஜகவில் இணைந்த கிரிமினல்கள் எண்ணிக்கை அதிகம் . ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என மோடி கூறுகிறார். ஆனால் ஊழல்வாதிகள் பாஜகவில் இணைந்த பிறகு அவர்களின் அனைத்து ஊழல் வழக்கு களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுதான் ஊழலுக்கு எதிரான போரா ட்டமா என்றும் கேள்வி எழுப்பினார்.
எனவே அரசியலமைப்பு சட்டத்தை, சமூக நீதியை, ஜனநாயகத்தை, மாநில உரிமையை சிதைக்கத் துடிக்கும் பாஜக வையும், அதற்கு துணை போகும் அதிமுகவை ஆவடி தொகுதி மக்கள் வீழ்த்த முன்வர வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.
இதில் ஆவடி சட்டமன்ற உறுப்பி னர் சா.மு.நாசர், மாநகரச் செயலாளர் சண்.பிரகாஷ், சிபிஎம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், செயற்குழு உறுப்பினர் சம்பத், வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.கே.மகேந்திரன், காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் இ.யுவ ராஜ், விசிக மாநகரச் செயலாளர் மு.ஆதவன், சிபிஐ மாநகரச் செய லாளர் எஸ்.மயில்வாகனன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அஜீஸ், அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் சர்புதின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி யினர் பேசினர். முன்னதாக தொகுதி செயலாளர் அ.ஜான் வரவேற்றார். எம்.ராபர்ட்ராஜ் நன்றி கூறினார்.