சென்னை, மார்ச் 15- தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எத்தனை முறை படை யெடுத்தாலும் வெற்றிபெற முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் அரசியல் விளக்கக் கூட்டம் திமுக கொளத்தூர் மேற்கு பகுதி சார்பில் வியாழனன்று (மார்ச் 14) பெரவள்ளூரில் நடை பெற்றது. பகுதிச்செயலாளர் ஏ.நாகராஜன் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்டு கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், தற்போது வெளி வந்துள்ள ஒரு கருத்து கணிப்பில் தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. கோடிக் கணக்கான ரூபாயை செல வழித்து கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்தை திணிக்கப் பார்க்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக, அதிமுக இணைந்து ஒரு அணியில் நின்ற போதே ஒரு தொகுதி யில்தான் வெற்றி பெற முடிந்தது. தற்போது சிதறு தேங்காய் போல் உடைந்து கிடக்கிறது பாஜக கூட்டணி. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இமயமலை போல் கம்பீரமாக நிற்கிறது.
அப்படி இருக்கும் போது எப்படி பாஜக, அதிமுக வெற்றி பெற முடியும் என்று கேள்வி எழுப்பினார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித் தாடுகிறது. அனைத்து அத்தியவசிய பொருட்களின் விலையும் 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் கடந்த 10 ஆண்டுகளில் 600 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை 40 ரூபாய்க்கு மேல் உயர்த்தப் பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள், பட்டி யலின மக்கள், ஆதிவாசி மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துகொண்டே இருக் கிறது. இதுகுறித்தெல்லாம் பிரதமர் மோடி பேச மறுக்கி றார். மாறாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை குறை சொல்லி, பொய் பேசி ஏமாற்றிக் கொண்டி ருக்கிறார்.
மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு படையெடுத்தாலும் இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்பதை அறுதியிட்டு கூறு கிறேன். சமூக நீதி, மாநில உரிமை, கூட்டாச்சி தத்து வத்தை, அரசியல் அமைப்பு சாசனத்தை குழி தோண்டி புதைக்க நினைக்கும் மோடி ஆட்சியை குழி தோண்டி புதைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
அந்த மகத்தான பணியை முன்னெடுப்போம் என்றார். இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல மைச்சர் இன்னும் பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து மதவெறியர்களை எதிர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறேன் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த கூட்டத்தில் அமைச் சர் பி.கே.சேகர்பாபு, காங்கி ரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை.வைகோ ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா,வ.முரளிதரன் (திமுக), சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், பகுதிச்செயலாளர் பா.ஹேமாவதி, ஜெ.டில்லி பாபு (காங்கிரஸ்) சு.ஜீவன் (மதிமுக) உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.