சென்னை, ஜூன் 1- ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7 கட்டங்களாக அறிவிக் கப்பட்ட 18-ஆவது மக்கள வைத் தேர்தல், சனிக்கிழமை யுடன் நிறைவடைந்தது.
இறு திக்கட்டமாக நாடு முழுவ தும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், ‘வெற்றி யின் முகட்டில் நிற்கிறது இந் தியா கூட்டணி’ என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள் ளார். பாசிச ஆட்சி வீழ்கிறது! “பாஜகவின் ஐந்தாண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உரு வாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட் டணி, மக்களின் எதிர பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது.
தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்ற மமதையில் இருந்த பாஜக-வுக்கு எதி ராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனை வருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது. தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் ‘இந் தியா’ கூட்டணியின் முன்ன ணித் தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம் பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கி றோம்.
இந்தியா கூட்டணி யின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. தேவை விழிப்புணர்வு வாக்கு எண்ணிக்கை யின் போது அதிகமான விழிப் புணர்வுடன் இந்தியா கூட் டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ‘ஜூன் 4’ இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக் கமாக அமையும். பாசிச பாஜக வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” எனக் குறிப் பிட்டுள்ளார். இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் 37 முதல் 39 தொகுதிகளை இந்தியா கூட்டணி வெல்லும் என பெரும்பாலான ஊடகங்கள் கூறியுள்ளன.