ஜூலை 9 வேலைநிறுத்த ஆயத்த கூட்டம்
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து ஜூலை 9 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி, மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள் சார்பில் வியாழனன்று (ஜூன் 26) தி.நகரில் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது. ஏஐபிஇஏ தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரமேஷ்குமார் பேசினார். இளங்கோவன் (சிஐடியு), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), சி.பி.கிருஷ்ணன் (பெபி), இ.அருணாச்சலம் (டிஎன்பிஇஎப்), எஸ்.சவரிமுத்து (ஜிஐஇஏஐஏ), என்.பாலகிருஷ்ணன் (ஜிஐஇஏ - எஸ்இசட்), எஸ்.எஸ்.டாவே (ஏஐபிஒஏ) பி.விஜயகுமார்(ஏஐஎல்ஐசிஇஎப் - எஸ்இசட்) உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.