tamilnadu

ஜெ.என்- 1 புதிய உருமாறிய வைரசால் ஆபத்தா?

சென்னை, டிச.22- கொரோனா தொற்றுக்கு பிறகு உரு மாறி உருமாறி பல வைரஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகை யில் ஒமைக்ரானில் இருந்து உரு மாறிய ஜெ.என்-1 என்ற வைரஸ் பரவி  வருவது பற்றி உலக சுகாதார நிறு வனம் உலக நாடுகளை உஷார்படுத்தி யுள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

ஒரு காலத்தில் இன்புளுயன்சா பர வியது. பருவக் கால காய்ச்ச லாக குளிர்காலத்தில் பரவுகிறது. அது மட்டுமல்ல இன்புளுயன்சாவில் இருந்து ஏ மற்றும் பி என்ற இரு  உருமாறிய வைரஸ்களும் வந்தன.இதன் மூலம் சாதாரண வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகிய வையும் இருக்கின்றன. ஆனால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவ தில்லை.

அதே போல்தான் கொரோனா வைரசும். அது முற்றிலுமாக அழிந்து விடாது. இருந்து கொண்டே தான் இருக்கும். 2020-ல் கொரோனா வைரஸ் பரவும் போது ஆல்பா வைரசாக பர வியது. இந்த ஆண்டு இறுதியில் ‘டெல்டா’ வகை வைரசாக உருமாறி பரவியபோது தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

நேரடியாக நுரையீரலை தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுத்தியது. அப்போது நம்மிடம் தடுப்பு மருந்து களும் இல்லை. அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டது. பெரும்பாலும் எல்லோரும் 3 தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உரு வானது.

அதேபோல் கொரோனா தாக்கிய தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித் தது. இதனால் படிப்படியாக பாதிப்பு  குறைந்தது.கொரோனாவின் உரு மாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது.

நைஜீரியாவில் இருந்து நம் நாட்டிற்கு வந்தவரிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பிறகு எக்ஸ்.பி.பி. என்ற வகை உருமாறி வந்தது. அதுவும் மறைந்து இப்போது உருமாறிய ஜெ. என்-1 என்ற வகை கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இது 26 பேரிடம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் யாருக்கும் பரவ வில்லை. பரிசோதனையை அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக கண்டுபிடிக்க முடியும். இதில் நாம் பார்க்க வேண்டி யது பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக் கிறார்கள் என்பதுதான். யாரும் படுத்த படுக்கையாக இல்லை. எனவே இதன் தாக்கம் ஆபத்தை ஏற்படுத்தாது.

மக்கள் புரிந்து கொள்ள வேண்டி யது என்னவென்றால், இது புதுவகை வைரஸ் இல்லை. மிக தீவிரமாக நுரை யீரல் பாதிப்பது இல்லை. மேலும் ஏற்கெனவே தடுப்பூசி எடுத்து கொண்டி ருப்பதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியால் வைரசின் வீரியம் குறைக் கப்படும். எனவே கொரோனாவை நினைத்து பீதி அடைய வேண்டியது இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.