tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆபரணத் தங்கம் சவரனுக்கு  ரூ.520 குறைந்தது
சென்னை, ஏப். 15 சென்னையில் ஆப ரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.600 வரை அதிகரித்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்களன்று சவ ரனுக்கு ரூ. 520 குறைந்தது. இதையடுத்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,790 க்கும், ஒரு சவரன் ரூ. 54,  320 க்கும் விற்பனை செய்ய ப்பட்டு வருகிறது. சென்னை யில் ஆபரணத் தங்கம் கிரா முக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 6, 790க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, சென்னை யில் சில்லறை வர்த்த கத்தில் வெள்ளி விலை கிரா முக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ. 89.50க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.89,500 க்கும் விற்பனை செய்யப்படு கிறது.

2 அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

சென்னை, ஏப். 15- திருவொற்றியூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் குடும்பத்தை விமர்சித்து பேசிய 2 அதிமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவொற்றியூர் கிழக்கு  பகுதி அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார தெரு முனை கூட்டம் சாத்துமா நகர் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் ராஜேந்திரன் பேசும் போது, முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகு தியை சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து முதல்வர் குடும்பத்தை அவ தூறாக பேசிய ராஜேந் திரன் (55) மற்றும் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்த திரு வொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம் (60)  ஆகியோர் மீது 5 பிரிவு களின் கீழ் பிணையில் வெளி வர முடியாத வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.