tamilnadu

img

கே.பாலகிருஷ்ணனுடன் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் – அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, ஆ.செல்வம், குமார், பொன்னிவளவன், அ.மாயவன், நேரு, சங்கர், சுரேஷ், காந்திராஜ், மகேந்திரன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை செவ்வாயன்று (பிப். 6) நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது ஓய்வூதியத் திட்டம், பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது, ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனவும், தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.