states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

கேரளத்தில் பக்ரீத் பண்டிகையை முன் னிட்டு வருகின்ற ஜூன் 7ஆம் தேதி பொது  விடுமுறை என அம்மாநில அரசு அறிவித் துள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பட்டிய லினத்தவர் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட  வகுப்பினரிடையே உள்ள சந்தர்ப்பவாத நபர்களை பயன்படுத்தி புதிய கட்சிகளை உரு வாக்கி தங்கள் கட்சிக்கு எதிராக சதி செய்து வரு வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2003 முதல் 2025 வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகளில் நாடு முழுவதும் 21 முக்கிய  கூட்ட நெரிசல் சம்பவங்களில் 1,436 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கா னோர் காயமடைந்துள்ளனர்.  2027இல் மக்கள் தொகை கணக்கெ டுப்பின் போது தென் மாநிலங்க ளின் பிரதிநிதித்துவம் குறைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் பாஜக செயலாற்றி வருகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

புத்தாண்டு பரிசாக தேசிய நெடுஞ்சாலை - 66 தில்லியில் அமைச்சர் முகமது ரியாஸ் பேட்டி

மலையாளிகளின் கனவுத் திட்ட மான “தேசிய நெடுஞ்சாலை - 66”  கட்டுமானப் பணிகள் உரிய நேரத்தில் முடிக்கப்படும் என்றும் 2026  ஆம் ஆண்டிற்கான பரிசாக தேசிய நெடுஞ்சாலை 66 திறக்கப்படும் என்றும்  ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி யளித்ததாக அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் பினராயி விஜயனுடன் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கேரள பொதுப்  பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ்  மேலும் கூறியதாவது: 2025 டிசம்பரில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து விவா தத்தில் எழுப்பப்பட்டன. அப்பகுதியில் செய்ய திட்டமிடப்  பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவா திக்கப்பட்டது. 360 மீட்டர் நீளமுள்ள பாலம்  அமைக்க உறுதியளிக்கப்பட்டது. ஆவணத்தில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படாமல் தடுக்க தலையிடுவதாக மத்திய அமைச்சர் முதலமைச்சரிடம் உறு தியளித்தார். நிலம் கையகப்படுத்துதலை அரசாங்கம் வெற்றிகரமாக முடித்துள் ளது. திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பதே இலக்கு. புதிய திட்டங்களை மாநிலத்திற்கு கிடைக்கச் செய்ய முடிவுகள் எடுக்கப்பட்  டன. இது மக்கள் தொகை அடர்த்தி யான மாநிலம் என்பதால், நிலம் கைய கப்படுத்துதல் ஒரு முக்கிய பிரச்சனை. புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை  அனுமதிப்பதற்காக தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தால் எழுப்பப்பட்ட அனைத்து விசயங்களும் பேசி முடிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் வெளிவட்டச் சாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜூலை மாத இறு திக்குள் இதற்கான ஒப்புதல் வழங்கப் படும். கொல்லம் செங்கோட்டை பசுமை வழி நெடுஞ்சாலைத் திட்டம் செயல் படுத்தப்படும். இந்தத் திட்டம் செப்டம்ப ரில் செயல்படுத்தப்படும். விமான  நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலை களை இணைக்கும் சாலைகள் சாத்தி யமாக மாறும் என்றும் அவர் கூறினார்.

தீவிரமடைகிறதா கொரோனா பரவல்? ஒரே நாளில் 7 பேர் பலி

மீண்டும் நாடு முழுவதும் கொரோனா  பரவல் தீவிரமடைந்து வரு கிறது. சில மாநில அரசுகள் கட்டுப்  பாடுகளை விதித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 564 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டதால் சிகிச்சையில் இருப்ப வர்களின் எண்ணிக்கை 4,866 ஆக அதி கரித்துள்ளது. அதே போல ஒரே நாளில்  கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று  வந்த 7 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை 51  ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக கேரளத்தில் புதிதாக  114 பேரும், கர்நாடகத்தில் 112 பேரும், தில்லியில் 105 பேரும், மேற்கு வங்கத்  தில் பேரும் கொரோனாவால் பாதிக்  கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு உத்தரவு கொரோனா பரவல் தொடர்பாக ஒன்  றிய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்  டுள்ளது. அதில், “ஆக்சிஜன், தனிமைப்  படுத்தும் படுக்கைகள், வென்டிலேட் டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்து கள் இருப்பதை மாநிலங்கள் உறுதி  செய்ய வேண்டும். மக்கள் அடிக்கடி கை  கழுவ வேண்டும். இருமல், காய்ச்சல் இருக்கும்போது நெரிசலான இடங்க ளைத் தவிர்க்க வேண்டும். கடுமையான  சுவாச நோய் உள்ளவர்கள் உஷாராக இருக்க வேண்டும். அறிகுறிகள் மோசமா னால் உடனடியாக மருத்துவ உதவி பெற  வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

எத்தனால் ஆலை அமைக்க எதிர்ப்பு தெலுங்கானாவில் வன்முறை

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கடவால் மாவட்டத்தில் எத்தனால் ஆலை அமைக்க அம்மாநில அரசு  தனியார் நிறுவனத்துக்கு அனுமதி யளித்துள்ளது. இதனை எதிர்த்து அம்மாவட்டத்தின் 8 கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் ராஜோலி மண்  டல் பகுதியில் புதன்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. தற்காலிக முகாம்கள் மற்றும்  சரக்குப் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட் டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் விரைந்து வன்முறையைக் கட்டுப்படுத்தினர். ஆலையின் நிர்வாகத்தினர் அளித்த புகா ரின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடு பட்ட 12 பேரை காவல்துறையினர் கைது  செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.