states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டில்

ஜூன் 10ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 26ஆவது ஆண்டு விழா நடைபெறுகிறது. சரத் - அஜித் பெயரில் தனித்தனியாகவே நடைபெறும். அதே போல கட்சியின் இரு பிரிவுகளும் மீண்டும் இணைவது குறித்து முறையான எந்த பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. இதுதொடர்பான சலசலப்பு காற்றில் மட்டுமே பரவியுள்ளது.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்

ஒன்றிய அரசுக்கு அடிபணியாத நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர். அவர்களது குடும்பத்தினர் சிறை வைக்கப்படுகின்றனர். அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டிய அமைப்புகளும் அரசை கண்காணிக்க வேண்டிய ஊடகங்களும் அடிபணிந்து விட்டன. ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்துக்கு மக்களின் போராட்டங்களே முடிவு கட்ட முடியும்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

ஸ்ரீநகரின் சின்னமான ஜமா மசூதியில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஜமா மசூதியைச் சுற்றியுள்ள மக்கள் படையெடுத்தனர். ஆனால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜமா மசூதியில் தொழுகையை அனுமதிப்பது பற்றி ஒன்றிய அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் இல்திஜா முப்தி

ஜமா மசூதி மூடப்பட்டிருக்கிறது. மிர்வைஸ் உமர் பாரூக்கை வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறார்கள். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகச் சொல்லிக் கொண்டு, ஏன் மிர்வைஸை சிறை வைத்திருக்கிறீர்கள்? இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காஷ்மீரில் எங்களின் வழிபாட்டு உரிமை ஏன் மறுக்கப்படுகிறது?