tamilnadu

img

ஐஐடி-இல் படிக்க இருக்கும் பழங்குடியின மாணவி!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஜெஇஇ Advanced தேர்வில் வெற்றி பெற்று, ஐஐடி-இல் படிக்கும் தகுதியை பெற்று அசத்தியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை கிராமமான கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து, 600க்கு 521 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஜெஇஇ Advanced தேர்வில் பழங்குடியினர் பிரிவில் அகில இந்திய அளவில் 417ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் ஐஐடி-இல் படிக்கும் தகுதியை பெற்றுள்ளார்.
தையல் தொழில் செய்து வந்த மாணவி ராஜேஷ்வரியிம் தந்தை ஆண்டி, புற்றுநோய் காரணமாக 2024ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.