ராஜஸ்தான்,ஜூன்.05- திருமணத்திற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட 15 லட்சம் மதிப்புள்ள பண மாலை திடுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் பாஸ் நகரத்தைச் சேர்ந்த மணமகனின் உறவினரான ஷாத், திருமண விழாவிற்கு ஹரியானாவிலிருந்து 15 லட்சம் மதிப்புடைய 3000 500 ரூபாய் நோட்டுகளுடைய பண மாலையை வாடகைக்கு எடுத்தார். திருமணம் முடிந்து மாலையைத் திருப்பிக் கொடுப்பதற்காக பைக்கில் சென்றபோது துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அடையாளம் தெரியாத நபர், ஓட்டுநரைத் தாக்கிவிட்டு மாலையைப் பறித்துக்கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.