tamilnadu

img

ஐஐடி-க்கு தேர்வாகிய பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்!

ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி-யில் படிக்க தேர்வாகியுள்ள பழங்குடியின மாணவி ராஜேஷ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute!
அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.