18 நாள் காத்திருப்புக்குப் பிறகு உடன்பாடு! கே.ஜி.டெனிம் தொழிலாளர் போராட்டம்
மேட்டுப்பாளையம், ஜூன் 6– சட்டவிரோதமாக கதவடைத்து தொழிலாளர்களை வஞ்சித்த கே.ஜி.டெனிம் ஆலை நிர்வாகத் தைக் கண்டித்து சிஐடியு தலைமை யில் 18 நாட்கள் தொடர் போராட் டத்தை தொழிலாளர்கள் மேற் கொண்டு வந்த நிலையில், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் வெள்ளியன்று இப்போ ராட்டம் முடிவுக்கு வந்தது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் தாலுகா ஜடையம்பா ளையம் ஊராட்சியில் உள்ள கே.ஜி. டெனிம் தொழிற்சாலை இயங்கி வந்தது. பிரபல ஜீன்ஸ் தயாரிக்கும் இந்நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வந்தனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் திடீ ரென ஆலையை சட்டவிரோதமாக மூடியது. இதனையடுத்து, இத் தொழிலாளார்கள் கோவை ஆட்சி யர் அலுவலகம் உள்ளிட்ட இடங்க ளில் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சிஐடியு இயக்கத்தை நாடினர். இதனைத்தொடர்ந்து, சிஐ டியு தலைமையில் கடந்த 18 நாட்க ளாக ஆலை முன்பு தொழிலாளர் கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் ஆலை நிர்வாகம், தொழிலாளர் களுக்கு சாதகமான எந்த முடிவை யும் எடுக்கவில்லை. இந்நிலையில், தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து, வெள்ளி யன்று, தொழிலாளர் நல ஆணை யர் சாந்தி முன்னிலையில், மீண்டும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதன்படி, தொழிலாளர்க ளுக்கு நிலுவையில் உள்ள சம்ப ளம் ஜூன் 30 ஆம் தேதிக்குள் வழங்கு வதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண் டது. மேலும், ஏனைய கோரிக்கை கள் குறித்து ஜூலை 1, 2025 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. இந்த முத்தரப்புப் பேச்சுவார்த் தையில், தொழிலாளர் நலத்துறை ஆணையர் சாந்தி, நிர்வாகத் தரப் பில் செல்வகுமார் சந்திரசேகர் ஆகி யோர் கலந்து கொண்டனர். சிஐடியு தரப்பில், கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கச் செயலாளர் சி. பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மற் றும் கே.ஜி. டெனிம் தொழிற்சங்க நிர்வாகிகள் சரவணகுமார், செல்வ குமார் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன் பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். கடந்த மே மாதம் 19 ஆம் தேதி முதல், தங்களது கோரிக் கைகளை வலியுறுத்தி கே.ஜி. டெனிம் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.