tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

கோரிக்கைகள் வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஏப். 22) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பா. பாலமுருகன், ஜெ. ஸ்ரீதர் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் து. கார்த்திகேயன், அரசு பணியாளர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் அ. சிவராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செ. சரவணன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் பொ. யோசுவா, தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவர் அ. சையத் சிராஜுதீன், வருவாய்த்துறை மாவட்ட செயலாளர் செல்வகுமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும், வாரிசு வேலை வழங்க கோரியும் சிஐடியு சார்பாக கடலூர் மண்டல போக்குவரத்து கழக  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு நிர்வாகிகள் ஜி.பாஸ்கரன் கண்ணன், அரும்பாலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூரில் மின் ஊழியர்கள் பிரச்சாரம்

நிரந்தர பணியாளர்கள், கேங்மேன், ஒப்பந்த மற்றும் பகுதி நேர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர்  மத்திய அமைப்பு சார்பில் திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது. திருப்பத்தூர் வட்ட தலைவர் எஸ்.தண்டபாணி தலைமையில் மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் எஸ்.ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவசீலன், ஓய்வூதியர் சங்க மாநில இணை செயலாளர் ஜெ.ஏங்கல்ஸ், அமைப்பின் கோட்ட செயலாளர் டி.ஜெயபால், வட்ட செயலாளர் கே.சந்திரசேகரன், வட்டப் பொருளாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

ஸ்மார்ட் மீட்டர் சிபிஎம் வலியுறுத்தல்... முதல் பக்கத் தொடர்ச்சி

எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டோட்டக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும், தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டருக்காக உலகளாவிய அளவில் வெளியிட்டுள்ள ஒப்பந்தப் புள்ளியை (டெண்டர்) ரத்து செய்வதுடன் ஸ்மார்ட் மீட்டரை தமிழ்நாடு மின்சார வாரியமே தேவையான இடங்களில் மட்டும் படிப்படியாக பொருத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிஎம் பாராஞ்சி கிளையில் தண்ணீர் பந்தல் திறப்பு

பாராஞ்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இருளர் காலனி பகுதியில் திங்களன்று (ஏப். 21) கிளைச் செயலாளர் ஆ. பிரசாந்த் தலைமையில் தண்ணீர் பந்தலை சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் எபிஎம். சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் & நெமிலி தாலுகா குழு உறுப்பினர் எஸ். கொல்லாபுரி, இ. சிவராமகிருஷ்ணன், பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்டுமான தொழிலாளர் ஓய்வூதியத்தை  ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை

சிதம்பரம், ஏப்.22- சிதம்பரத்தில் சி ஐ டி யு கடலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சிதம்பரம் நகர மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட் டிற்கு மாவட்ட துணை தலைவர் திருஞானம் தலைமை தாங்கி கொடியேற்றிவைத்தார். சங்கத்தின் நிர்வாகி கதிரேசன் வரவேற்றார்.  இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேள னத்தின் மாநில துணைத்தலைவர் மூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  இதில் சிஐடியு மாவட்ட இணை செயலாளர் சங்கமேஸ்வரன், பொருளாளர் கார்த்திகேயன், மாவட்டத் துணைத் தலை வர் இளங்கோவன், இணை செயலாளர் தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.  மாவட்ட பொதுச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி நிறைவுறையாற்றினார்.  சிதம்பரம் நகர தலைவராக திருஞானம்,  நகர செயலாளராக  எழிலரசன்,  நகர பொருளாளராக கதிரவன் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில்  கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,  கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்,  பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55  வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,  கட்டு மான தொழிலாளர்களின் இயற்கை மரணத் திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அமெரிக்க துணை ஜனாதிபதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

இந்திய வேளாண்மையை கொள்ளையடிக்கும் விதமாக, சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் ஒப்பந்தம் போட இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே. டி.வான்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறக் கோரி, அவரது  உருவப்படத்தை எரித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி. கே. வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் ஏ. லட்சுமணன், பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கே.கே. வெங்கடேசன், எம். பிரகலநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, கமலக்கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் அருண்குமார், ஒன்றிய நிர்வாகி ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மோசடி அழைப்புகளை ஏற்காதீர்:  ஏர்டெல் வேண்டுகோள்

சென்னை,ஏப்,22- செயற்கை நுண்ணறிவால்  இயக்கப்படும் ஸ்பேம் கண்டறிதல் கருவியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஸ்பேமர்களை முறியடிக்கும் வகையில் இரண்டு குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை அறிமுகப்படுத்துவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான இந்திய மொழிகளில் அழைப்புகளையும் எஸ்எம்எஸ் செய்திகளுக்கான ஸ்பேம் எச்சரிக்கைகளையும் பெறுவார்கள். இந்தப் புதிய அம்சம் பத்து உள்ளூர் மொழிகளில் கிடைக்கும். எதிர்காலத்தில் மேலும் மொழிகளச் சேர்க்கும் திட்டமும் உள்ளது. ஏர்டெல்லின் ஏஐ-யால் இயக்கப்படும் கருவி இப்போது சர்வதேச நெட்வொர்க்குகளில் இருந்து வரும் அனைத்து ஸ்பேம் அழைப்புகளையும் எஸ்எம்எஸ்-களையும் திரையிட்டு வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கும். உள்நாட்டு ஸ்பேம் அழைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஏர்டெல் தீவிரப்படுத்தியவுடன் மோசடி செய்பவர்களும் ஸ்பேமர்களும் மோசடி அழைப்புகளை இந்தியாவிற்குள் அனுப்ப வெளிநாட்டு நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த ஆபத்தான போக்கு கடந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு ஸ்பேம் அழைப்புகளில் 12% அதிகரிப்பை ஏற்படுத்தியது. ஏர்டெல் தனது புதிய அம்சத்தின் மூலம் இந்த வளர்ந்து வரும் சவாலை முறியடிக்கலாம் என்று ஏர்டெல் சந்தையிடல் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் சர்மா கூறியுள்ளார்.

ஏப்ரல் 26 முதல் மே 16 வரை விஐடியில் கோடைகால இலவச  விளையாட்டு பயிற்சி முகாம்

வேலூர், ஏப் 22 - வேலூர் விஐடி பல்கலைக்கழக உடற்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரு கிறது. அதே போல் இந்த ஆண்டும் 19ம் ஆண்டு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 16ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, சதுரங்கம், கைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து,கராத்தே, எறிபந்து மற்றும் யோகாசனம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாமல் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும். மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் சேர எவ்வித கட்டணமும் கிடையாது. சிறந்த பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சி தினமும் காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 26-ம்தேதி காலை 6.30 மணிக்கு விஐடி கூடைப்பந்து மைதானத்தில் விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா துவங்குகிறது என விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை  ஏப்.25 விவசாயிகள் குறைதீர்வு  கூட்டம்

திருவண்ணாமலை,ஏப்.22- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயி கள் குறை தீர்வு நாள் கூட்டம்  வருகிற வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் தலைமையில் நேரடி யாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திரு வண்ணாமலை மாவட்  டத்தில் உள்ள வேளாண் துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் வேளாண் பொறியியல் துறை கால்நடை பரா மரிப்புத்துறை. கூட்டு றவுத்துறை. வருவாய்த் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதி நிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட் டத்தில் தெரிவித்தும் தனி நபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு  ஆட்சியர்  கேட்டுக்கொண்டார்.